×

வீட்டின் மின் மீட்டர் அளவை கணக்கெடுப்பதாக கூறி 7 பெண்களை அடித்து கொன்ற ‘சைக்கோ’: சடலங்களுடன் உறவு கொண்ட கொடூரம்வீட்டின் மின் மீட்டர் அளவை கணக்கெடுப்பதாக கூறி 7 பெண்களை அடித்து கொன்ற ‘சைக்கோ’: சடலங்களுடன் உறவு கொண்ட கொடூரம்

கொல்கத்தா: வீட்டின் மின் மீட்டர் அளவை கணக்கெடுப்பதாக கூறி, 7 பெண்களை அடித்துக் கொன்ற ‘சைக்கோ’ கொலைகாரனை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். அவன், தான் கொன்ற 2 பெண்களின் சடலத்துடன் உறவு கொண்டதாக வாக்குமூலத்தில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்களை கூறி உள்ளான்.

மேற்கு வங்க மாநிலம் கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும், வீட்டில் தனியாக இருந்த 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஒரே மாதிரியாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இருவரின் தலையில் பலத்த காயத்துடன் கழுத்து இறுக்கப்பட்டிருந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

அப்பகுதியில் இருந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், சிவப்பு நிற பைக்கில், அதே நிற ஹெல்மட் அணிந்திருந்த நபரின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த நபர், முர்ஷிதாபாத் பகுதியை சேர்ந்த 42 வயதான கமருசமான் சர்கார். அவனது நடவடிக்கையை கண்காணித்த போலீசார், சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கமருசமான் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் கூறியதாவது:

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து கொலை செய்வதை கடந்த 2013ம் ஆண்டிலிருந்து கமருசமான் செய்து வந்துள்ளான். இவன், எளிதாக தப்பிக்கக் கூடிய வீடுகளை தேர்ந்தெடுத்து, சரியாக மதிய நேரத்தில் சென்றுள்ளான். மின் மீட்டர் அளவை கணக்கெடுப்பதாக கூறி வீட்டிற்குள் நுழைவான். உள்ளே சென்றதும், வீட்டிலிருக்கும் பெண் தனியாக இருப்பதை உறுதிபடுத்திக் கொள்வான். உடனே, இரும்பு ராடால் தலையில் பலமாக அடித்து அவர்கள் ஓடாதபடி செய்வான். பின்னர் சைக்கிள் செயின் மூலம் கழுத்தை இறுக்கி கொலை செய்வான். அவர்கள் இறந்த பின்னர் வீட்டிலிருந்து கிடைக்கும் பொருட்களை திருடிச் செல்வான்.

இந்த சம்பவங்களை சிறிது நேரத்தில் செய்து விட்டு தப்பிவிடுவான். இதுவரை இவன் 7 பெண்களை இதுபோல் கொலை செய்துள்ளான். அதில் 2 பெண்களை கொன்ற உடனேயே அவர்களின் சடலத்துடன் உறவு கொண்டுள்ளான். விசாரணையில் சிக்கிவிடாமல் இருக்க, அப்பெண்களின் மர்ம உறுப்பில் இரும்பு ராடையும் செறுகி சென்றுள்ளான். கடந்த மாதம் 30ம் தேதி 16 வயது மதிக்கத்தக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொல்ல முயற்சித்துள்ளான். ஆனால் அப்பெண் படுகாயத்துடன் தப்பி சிகிச்சையில் உள்ளார் என்றனர். கமருசமானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

‘ஏன் செய்தேன்னு தெரியவில்லை’
கொலை குறித்து கமருசான் சர்கார் போலீசாரிடம், ‘‘ஏன் இதுபோல் கொலை செய்தேன்னு எனக்கே தெரியல’’ என கூறி உள்ளான். அவனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். குடும்ப வாழ்க்கையில் எந்த பிரச்னையும் இல்லை. மனநல பரிசோதனையிலும் கமருசான் நல்ல மனநிலையில் இருப்பதாகவே அறிக்கை வந்துள்ளது.

அக்கம்பக்கத்தினரிடமும் நன்றாகவே பழகி உள்ளான். எப்போதும் காலையில் டிப்டாப்பாக ஆடை அணிந்து பைக்கில் கிளம்பும் அவன், கட்டுமான தொழில் செய்து வருவதாக கூறி உள்ளான். அவனது வீட்டிலிருந்து பெரிய அளவில் நகைகள் பறிமுதல் செய்யப்படவில்லை. எனவே நகை, பணத்திற்காக அவன் கொலை செய்திருக்க முடியாது என்றே போலீசார் கூறுகின்றனர்.

Tags : women ,house ,
× RELATED திருச்சி அருகே அறுந்து கிடந்த...